Wednesday, February 9, 2011

இந்தியாவுக்கு பவுடர் போடும் புத்திசாலிகள்

சமீபத்தில் விஜய் டிவி புகழ் கோபிநாத்தின் உரை அடங்கிய வீடியோ ஒன்றை என் நண்பர்கள் facebook-யில் சிபாரிசு செய்திருந்தனர். மிகவும் அபத்தமான கருத்தை சொல்லும் வீடியோ. பார்க்கும்போதே வேதனையாக இருந்தது. கோபிநாத் உரையின் சாராம்சம் இதுதான். இந்தியா மிகச்சிறந்த நாடு. அதை நாம் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் இந்தியா அதன் குடிமக்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. இங்குதான் கல்வி இலவசம், மருத்துவம் இலவசம். விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம். இப்படி நீண்டு கொண்டே செல்கிறது பட்டியல்.

அண்மைய இடுகைகள்