அன்புள்ள தோழி,
இது வரை ஈழத்தில் இருந்து வந்த உயிர் இழுப்புச்செய்திகள் நமக்கு ஏற்படுத்திய வலியைவிட பல மடங்கு வலியை இப்போது உணர்கிறோம் . பிரபாகரன் களத்தில் இருந்த வரை, நிகழ்ந்த அத்தனை உயிர் இழப்புகளுக்கும் எதோ ஒரு அர்த்தம் இருந்து வந்ததாகவே உணர்ந்துவந்தோம்.
ஓர் இரவு, நம் தொலைபேசி உரையாடலில் நீங்கள் எனக்கு சொன்ன கதை ஒன்றுதான் என் நினைவிற்கு வருகின்றது. ஒரு ஓவியர், உடல்நலமற்ற பெண், இலைகள் உதிர்ந்து காய்ந்துகொண்டு வரும் மரம் ஆகியவை பற்றிய கதை அது. அந்த கதையின் கடைசியில் வரும் ஒற்றை இலைதான் பிரபாகரன். இன்று அதுவும் உதிர்ந்துவிட்டது.