Tuesday, April 27, 2010

நம் படுக்கை அறையிலும் கூட!




எப்போதும்
எனக்கு மேலே இருந்தே
செயல்பட நினைக்கிறாய்.
நம் படுக்கை அறையிலும் கூட!

Sunday, April 25, 2010

புன்னகைக்கும் பேருந்துகள்



நீ ஊரில் இல்லாத நாட்களில்
உன் விடுதி வழி செல்லும் பேருந்துகள்
என்னைக் காண நேர்ந்தால்
ஒரு வித ஸ்நேகப் புன்னகையுடன் கடந்து போகின்றன.
அவைகளிடம் என்ன சொல்லிவிட்டு சென்றாய்?

Monday, April 12, 2010

பிழையில்லாத ஒரு கவிதை தருகிறேன்


உன்னைப் பற்றி
பிழையில்லாத ஒரு கவிதை தருகிறேன்.
என்னைப் பற்றி
ஒரு முத்தம் தா

Thursday, April 8, 2010

பேராண்மை



மருத்துவப்பரிசோதனைக்காக மனித உயிர்கள் எலியைப் போல பயன்படுத்தப்படுகிறார்கள் என ‘ஈ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா சூழலில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததால், எஸ். பி. ஜனநாதனின் பேராண்மை படத்திற்கு சற்று கூடுதல் எதிர்பார்ப்புடனே சென்றேன்.

அண்மைய இடுகைகள்